பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 4ம் தேதி "பாஸ்போர்ட் மேளா " சிறப்பு முகாம் துவக்கம்


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் அலுவலகத்தின் சார்பாக வரும் பிப்ரவரி 4ம் மற்றும் 5ம் தேதிகளில் பாஸ்போர்ட் மேளா சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதில், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இணையதளம் மூலம் விண்ணப்பித்த நபர்கள் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்து பயனடையலாம்.

இந்த முகாமானது பாஸ்போர்ட் சேவா கேந்தரா 25 ஏஜிடி பிசினஸ் பார்க்கில் (லோட்டஸ் கண் மருத்துவமனை அருகில்) நடைபெறவுள்ளது. 

இம்முகாமில், சாதாரண பாஸ்போர்ட் வழங்குவதற்கு மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். இதற்காக இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள், 4 மற்றும் 5ம் தேதிகளில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்தராவில் தகுந்த ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

இதற்கான அழைப்பு ஜனவரி 25ம் தேதி முதல் வழங்கப்படும். மேலும், தட்கல் மற்றும் போலிஸ் க்ளியரன்ஸ் சான்றிதழ்கள் இந்த முகாமில் பெறப்பட மாட்டாது. அன்றைய தினத்தில் புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...